Search This Blog



விடியல்.........

விடிகிற பொழுதுகள் வலிதீர்க்கும்
கண்ணீரை துடைத்துக்கொள் என் இனமே.
வருகிற நாட்கள் நமதாகும்
வலியோடு போராடு என் உறவே.
சுமைகள் மூடிய குப்பைதொட்டியாய்
நம் இதயம் இதுவரை துடித்தது போதும்
இன்று முதல் கொஞ்சம்
புன்னகைசெய்ய கற்றுக்கொள்வோம்.
நாம் தோல்வியை கண்டு துவண்டுபோனால்
நாளய வெற்றியின் சரித்திரத்தை யார் எழுதுவது???
வானம் ஒன்றூம் இடியவில்லை தமிழா.
நாம் நம்பிக்கை இழப்பதற்கு..........
இந்த பூமி இன்னும் முடியவில்லை தமிழா.
நாம் கண்ணீர்கள் வடிப்பதற்கு.,.......
நாம் இழந்த உயிர்களூம்
நாம் சிந்திய இரத்தங்களூம்
நாளைய விடியலுக்கான விதைகளை
போட்டுவிட்டு சென்றிருக்கின்றன.
ஆதலால் நாம் அனைவரும் ஒற்றுமையாய் நின்று
ஒரேகுரலில் உரக்க கத்திப்பார்போம்
மேகம் சூழ்ந்த அந்த கிழக்கு செவ்வானம்
மெதுவாய் விடியல் போடும்.